திருகோணமலை துறைமுகம் விவசாய உற்பத்தி ஏற்றுமதி துறைமுகமாக அபிவிருத்தி - Phoenix 24 News

Breaking

Post Top Ad

PropellerAds

Post Top Ad

05 January, 2018

திருகோணமலை துறைமுகம் விவசாய உற்பத்தி ஏற்றுமதி துறைமுகமாக அபிவிருத்தி

Image result for திருகோணமலை துறைமுகம்
விவசாய உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்யும் துறைமுகமாக திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மொறகஹந்தை விவசாய நீர்ப்பாசன திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி பணிகள் குறித்து செயலாளர் இவ்வாறு விளக்கமளித்தார்.

இதுதொடர்பாக இன்று நடைபெற்ற செய்தியாளருடனான சந்திப்பில் பொலனறுவையிலிருந்து திருகோணமலையை ஒரு மணித்தியாலத்திற்குள் சென்றடையக்கூடியதாக நெடுஞ்சாலை ஒன்று அமைக்கப்பட்டுவருவதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.

வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை அனர்த்தத்தின் காரணமாக எதிர்பாராத விதத்தில் அரிசிக்கான தட்டுப்பாட்டை நாம் எதிர்கொண்டோம். புதிய இந்த மொறகஹந்தை திட்டத்தின்மூலம் நெல் உற்பத்தியை போன்று பாரம்பரிய பழம் உற்பத்தியும் இரண்டுமடங்காக அதிகரிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad